கோவிலின் நடை கடந்த மாதம் 30ஆம் தேதி திறக்கப்பட்டது

இதனால் பக்தர்களை பம்பையில் இருந்தே குழு, குழுவாக போலீசார் அனுப்பி வைக்கிறார்கள். சுமார் 6 மணி நேரம் காத்திருந்த பிறகே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்து உள்ள ஐயப்ப பக்தர்கள் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்பதற்காகவும், மகர ஜோதியை தரிசிப்பதற்காகவும் தற்போதே சபரிமலையில் ஆங்காங்கே கூடாரம் அமைத்து தங்கத் தொடங்கிவிட்டனர். சபரிமலை சன்னிதானம் நோக்கி பக்தர்கள் நடந்து செல்லும் பெருவழிப்பாதை என்று அழைக்கப்படும் எருமேலி பகுதி அடர்ந்த காடுகள் நிறைந்த இடம் ஆகும். தற்போது இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் பாதுகாப்பாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்து இருந்தனர்.